என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் அடுத்த மாதம் வியாபாரிகள் கண்டன பேரணி- விக்கிரமராஜா
Byமாலை மலர்18 Jun 2018 11:40 AM GMT (Updated: 18 Jun 2018 11:40 AM GMT)
வால்மார்ட் நிறுவனத்தை கண்டித்து டெல்லியில் அடுத்த மாதம் வியாபாரிகள் கண்டன பேரணி விக்கிரமராஜா அறிவிப்பு
சங்கரன்கோவில்:
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சங்கரன் கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்களில் வியாபாரிகள் கடைகள் நடத்தி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாற்று இடம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு, குறு வியாபாரிகளை பாதிக்கும் வால்மார்ட் நிறுவனத்தை அனுமதிக்கக்கூடாது.
கடந்த 2012-ம் ஆண்டு சென்னையில் வால்மார்ட் நிறுவனம் தனது கிளையை திறக்க முயற்சி செய்தது. அப்போது வணிகர் சங்கங்களின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. எங்கள் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அன்றைய முதல்அமைச்சர் ஜெயலலிதா வால்மார்ட் நிறுவனத்திற்கு தடை விதித்து, அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தார்.
தற்போது வேறு பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் கால் ஊன்ற வால்மார்ட் நிறுவனம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இதனை கண்டித்து டெல்லியில் அடுத்த மாதம் (ஜூலை) 24ந்தேதி பெரிய அளவில் கண்டன பேரணி நடத்த உள்ளோம். ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரன்கோவில் நகரில் பாரம்பரிய திருவிழா ஆடித்தவசு திருவிழாவாகும். திருவிழா காலங்களில் இரவில் கூடுதல் நேரம் வியாபாரிகள் கடைகள் நடத்த அனுமதி கொடுக்க வேண்டும். அதேபோல் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட நேரங்களில் கடைகளை அடைக்க வியாபாரிகளை கட்டாயப்படுத்தக் கூடாது. தொடர்ந்து வியாபாரிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால் காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சங்கரன் கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்களில் வியாபாரிகள் கடைகள் நடத்தி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாற்று இடம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு, குறு வியாபாரிகளை பாதிக்கும் வால்மார்ட் நிறுவனத்தை அனுமதிக்கக்கூடாது.
கடந்த 2012-ம் ஆண்டு சென்னையில் வால்மார்ட் நிறுவனம் தனது கிளையை திறக்க முயற்சி செய்தது. அப்போது வணிகர் சங்கங்களின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. எங்கள் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அன்றைய முதல்அமைச்சர் ஜெயலலிதா வால்மார்ட் நிறுவனத்திற்கு தடை விதித்து, அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தார்.
தற்போது வேறு பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் கால் ஊன்ற வால்மார்ட் நிறுவனம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இதனை கண்டித்து டெல்லியில் அடுத்த மாதம் (ஜூலை) 24ந்தேதி பெரிய அளவில் கண்டன பேரணி நடத்த உள்ளோம். ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரன்கோவில் நகரில் பாரம்பரிய திருவிழா ஆடித்தவசு திருவிழாவாகும். திருவிழா காலங்களில் இரவில் கூடுதல் நேரம் வியாபாரிகள் கடைகள் நடத்த அனுமதி கொடுக்க வேண்டும். அதேபோல் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட நேரங்களில் கடைகளை அடைக்க வியாபாரிகளை கட்டாயப்படுத்தக் கூடாது. தொடர்ந்து வியாபாரிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால் காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X