என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிதம்பரம் - கோவையை கலக்கிய பிரபல ரவுடி கடலூர் கோர்ட்டில் சரண்
Byமாலை மலர்6 Jun 2018 1:33 PM GMT (Updated: 6 Jun 2018 1:33 PM GMT)
பொதுசொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த பிரபல ரவுடி இன்று கடலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சுரேந்தர்(வயது 35). இவர் மீது சிதம்பரம், கோயம்புத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கு மற்றும் பொதுசொத்துக்களை சேதப்படுத்திய வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு பொதுசொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் சுரேந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சுரேந்தர். அதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜாராகாமல் இருந்தார். இதனால் சுரேந்தரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் சுரேந்தர் ஆஜராகினார். அதன் பின்னர் சுரேந்தரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X