search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி கோர்ட்டில் ஆஜராக நடிகர் நெப்போலியன் வந்தபோது எடுத்தபடம். அருகில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளார்.
    X
    பண்ருட்டி கோர்ட்டில் ஆஜராக நடிகர் நெப்போலியன் வந்தபோது எடுத்தபடம். அருகில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளார்.

    தேர்தல் விதிமீறல் வழக்கு: பண்ருட்டி கோர்ட்டில் நடிகர் நெப்போலியன் ஆஜர்

    தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக நடிகர் நெப்போலியன் பண்ருட்டி கோர்ட்டில் நீதிபதி கணேஷ் முன்பு ஆஜரானார். வழக்கு விசாரணையை நீதிபதி நாளை ஒத்திவைத்தார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் நெப்போலியன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சுப.வீரபாண்டியன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக இன்று நடிகர் நெப்போலியன் பண்ருட்டி கோர்ட்டில் நீதிபதி கணேஷ் முன்பு ஆஜரானார். வழக்கு விசாரணையை நீதிபதி நாளை ஒத்திவைத்தார்.

    நடிகர் நெப்போலியனுடன் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உடன் வந்திருந்தார். #Tamilnews
    Next Story
    ×