என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்த கிடந்த நாயையும், பொதுமக்கள் அந்த நாயை குழி தோண்டி புதைப்பதையும் படத்தில் காணலாம்.
    X
    இறந்த கிடந்த நாயையும், பொதுமக்கள் அந்த நாயை குழி தோண்டி புதைப்பதையும் படத்தில் காணலாம்.

    அந்தியூர் அருகே மலைப்பகுதியில் நாயை இறுக்கி கொன்ற 15 அடி நீள மலைப்பாம்பு

    அந்தியூர் அருகே மலைப்பகுதியில் நாயை 15 அடி நீள மலைப்பாம்பு இறுக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே பர்கூர் மலையை ஒட்டியுள்ள தட்டக்கரை கிராமம் உள்ளது. இந்த பகுதியில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

    இங்கு நேற்று காலை 2 நாய்கள் குறைத்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு நாயை 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சுற்றிக் கொண்டது. இதனை பார்த்த மற்றொரு நாய் விடாமல் குறைத்து சத்தமிட்டது.

    இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கம் உள்ள பொது மக்கள் அந்த பகுதிக்கு வந்து நாய் எதற்காக குரைக்கிறது? என்று பார்த்தனர். அப்போது மலைப்பாம்பு ஒன்று அந்த நாயை சுற்றியவாறு இறுக்கிக் கொண்டு இருந்தது. இதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து நாயை அதன் பிடியில் இருந்து விடுவிக்க முயன்றனர். பிறகு பாம்பு நாயை விட்டு விட்டு ஓர் பாறையின் இடுக்கு பகுதிக்கு சென்று விட்டது. பிறகு பொதுமக்கள் நாயை பார்த்தனர். அந்த நாய் இறந்த நிலையில் கிடந்தது. இது குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வந்து பார்த்த போது நாயை இறுக்கி கொன்ற பாம்பு அந்த இடத்தில் இல்லை. அது எங்கு சென்றது என தெரியவில்லை.

    இதனையடுத்து மீண்டும் ஊருக்குள் அந்த மலை பாம்பு வருமா? என்கிற அச்சத்துடன் அந்த பகுதி மக்கள் உள்ளனர். இதே போல் கடந்த 1 வருடத்திற்குள் இதே தட்டக்கரை பகுதியில் ஒரு மலைப்பாம்பு 3 முறை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இந்த பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இறந்து கிடந்த நாயை இப்பகுதி மக்கள் கண்ணீருடன் அப்பகுதியில் குழிதோண்டி புதைத்தனர்.
    Next Story
    ×