என் மலர்
செய்திகள்

சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுபெற்ற மகேஸ்வரி
காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினருக்கு தேசிய விருது
கடந்த 2016-ஆம் ஆண்டிற்கான சிறந்த கைத்தறி நெவாளர்களுக்கான விருதுக்கு இந்தியா முழுவதும் 21 பேரின் பட்டு சேலைகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சீபுரம்:
கடந்த 2016-ஆம் ஆண்டிற்கான சிறந்த கைத்தறி நெவாளர்களுக்கான விருதுக்கு இந்தியா முழுவதும் 21 பேரின் பட்டு சேலைகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த கே.மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த சேலை “காலை, மாலை” (மார்னிங்-ஈவினிங்) என்ற ரகத்தில் முந்தானையில் மயில் சக்கரம் ஆகிய வடிவங்களுடன் மஸ்டர்டு பிரவுன், அரக்கு நிறத்தில் சேலை நெய்யப்பட்டு பாரம்பரிய பட்டு வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் சேலையில் மொக்கு, நட்சத்திரம், கையில் முட்டிக்கு மேலே அணியப்படும் வங்கி போன்ற வடிவங்கள் உள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த சேலை தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ளது.
மேலும் சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கான தேசிய நற்சான்று விருதுக்கு முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த பி.பார்வதி மற்றும் காஞ்சீபுரத்தை சேர்ந்த தனியார் நெசவாளர் ஆர்.வரதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைத்தறி துணி விற்பனைக்கான தேசிய விருது காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்திற்கும், கைத்தறி துணை விற்பனை தேசிய நற்சான்றிதழ் விருது காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய விருதுக்கு, விருதுடன் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், தேசிய நற்சான்று விருதுக்கு, ரூ.75 ஆயிரமும் நற்சான்றிதழும் வழங்கப்படும். இந்த விருதுகளை பிரதமர் அல்லது ஜனாதிபதி வருகிற ஆகஸ்ட் 7-ந்தேதி தேசிய கைத்தறி தினத்தில் வழங்குவார்கள் என்று தெரிகிறது. விருதுக்கு தேர்வான மகேஸ்வரி கூறியபோது:-
எங்கள் குடும்பம் பாரம்பரியமாக நெசவுத் தொழில் செய்து வருகிறோம். நான் 35 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். விருது பெற்ற இந்த சேலையை நெய்வதற்கு 1 மாத காலம் ஆனது. சாதாரண சேலை நெய்வதற்கு ஒருவரே சேலை அறுக்கலாம். ஆனால் இது போன்ற சிறப்பு ரகங்களில் 2 பேர் மாதம் முழுவதும் சேலை நெய்து அறுக்க வேண்டும். நெசவு தொழில் நலிவுற்று இருக்கும் நிலையில் இது போன்ற அங்கீகாரம் மற்றும் விருதுகள் தான் தொழிலை தொடர உத்வேகத்தை கொடுக்கும் என்றார்.
காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் 3 விருதுகளை பெற்றதையொட்டி அதன் உறுப்பினர்களை சங்கத் தலைவர் வீ.வள்ளிநாயகம், இணை இயக்குநர் எஸ்.சாரதி சுப்புராஜ், துணைத்தலைவர் எஸ்.ஜெயந்தி சோமசுந்தரம், இயக்குநர்கள் பி.சம்பத், எஸ்.பாஸ்கர், பி.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.இளங்கோவன், எஸ்.கீதா சண்முகானந்தம் ஆகியோர் பாராட்டினர். #tamilnews
கடந்த 2016-ஆம் ஆண்டிற்கான சிறந்த கைத்தறி நெவாளர்களுக்கான விருதுக்கு இந்தியா முழுவதும் 21 பேரின் பட்டு சேலைகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த கே.மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த சேலை “காலை, மாலை” (மார்னிங்-ஈவினிங்) என்ற ரகத்தில் முந்தானையில் மயில் சக்கரம் ஆகிய வடிவங்களுடன் மஸ்டர்டு பிரவுன், அரக்கு நிறத்தில் சேலை நெய்யப்பட்டு பாரம்பரிய பட்டு வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் சேலையில் மொக்கு, நட்சத்திரம், கையில் முட்டிக்கு மேலே அணியப்படும் வங்கி போன்ற வடிவங்கள் உள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த சேலை தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ளது.
மேலும் சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கான தேசிய நற்சான்று விருதுக்கு முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த பி.பார்வதி மற்றும் காஞ்சீபுரத்தை சேர்ந்த தனியார் நெசவாளர் ஆர்.வரதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைத்தறி துணி விற்பனைக்கான தேசிய விருது காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்திற்கும், கைத்தறி துணை விற்பனை தேசிய நற்சான்றிதழ் விருது காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய விருதுக்கு, விருதுடன் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், தேசிய நற்சான்று விருதுக்கு, ரூ.75 ஆயிரமும் நற்சான்றிதழும் வழங்கப்படும். இந்த விருதுகளை பிரதமர் அல்லது ஜனாதிபதி வருகிற ஆகஸ்ட் 7-ந்தேதி தேசிய கைத்தறி தினத்தில் வழங்குவார்கள் என்று தெரிகிறது. விருதுக்கு தேர்வான மகேஸ்வரி கூறியபோது:-
எங்கள் குடும்பம் பாரம்பரியமாக நெசவுத் தொழில் செய்து வருகிறோம். நான் 35 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். விருது பெற்ற இந்த சேலையை நெய்வதற்கு 1 மாத காலம் ஆனது. சாதாரண சேலை நெய்வதற்கு ஒருவரே சேலை அறுக்கலாம். ஆனால் இது போன்ற சிறப்பு ரகங்களில் 2 பேர் மாதம் முழுவதும் சேலை நெய்து அறுக்க வேண்டும். நெசவு தொழில் நலிவுற்று இருக்கும் நிலையில் இது போன்ற அங்கீகாரம் மற்றும் விருதுகள் தான் தொழிலை தொடர உத்வேகத்தை கொடுக்கும் என்றார்.
காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் 3 விருதுகளை பெற்றதையொட்டி அதன் உறுப்பினர்களை சங்கத் தலைவர் வீ.வள்ளிநாயகம், இணை இயக்குநர் எஸ்.சாரதி சுப்புராஜ், துணைத்தலைவர் எஸ்.ஜெயந்தி சோமசுந்தரம், இயக்குநர்கள் பி.சம்பத், எஸ்.பாஸ்கர், பி.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.இளங்கோவன், எஸ்.கீதா சண்முகானந்தம் ஆகியோர் பாராட்டினர். #tamilnews
Next Story






