என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சிபுரத்தில் இரண்டு கையால் கியர் போட்டு பஸ்சை ஓட்டும் தற்காலிக டிரைவர்
    X

    காஞ்சிபுரத்தில் இரண்டு கையால் கியர் போட்டு பஸ்சை ஓட்டும் தற்காலிக டிரைவர்

    காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பஸ்சில் டிரைவர் ஒருவர் இரண்டு கைகளாலும் ‘கியர்’ போட்டு பஸ்சை ஓட்டி வருகிறார். இதனால் அதில் பயணம் செய்யும் பயணிகள் வேறு வழியின்றி அச்சத்துடன் சென்று வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 7-வது நாளாக தொடருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 டிப்போக்களில் இருந்து 740 பஸ்கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தன. தற்போது 70 சதவீத பஸ்கள் தற்காலிக டிரைவர்கள் மூலம் இயங்கத் தொடங்கி உள்ளன. அரசு பஸ்கள் முறையாக கிராமப்புறங்களில் இருந்து பெருமளவில் இயக்கப்படாததால் பள்ளி மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்கு செல்வோர் ரெயிலை பயன் படுத்துவதால் காஞ்சீபுரத்தில் இருந்து ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் தற்காலிக டிரைவர்களுக்கு தொடர்ந்து பஸ்களை இயக்கும் பயிற்சி இல்லாததால் மெதுவாக பஸ்களை ஓட்டி வருகின்றனர். ஓட்டை உடசல் பஸ்களை ஓட்டவே தற்காலிக டிரைவர்கள் படாதபாடு பட்டு வருகிறார்கள்.

    காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பஸ்சில் டிரைவர் ஒருவர் இரண்டு கைகளாலும் ‘கியர்’ போட்டு பஸ்சை ஓட்டி வருகிறார். இதனால் அதில் பயணம் செய்யும் பயணிகள் வேறு வழியின்றி அச்சத்துடன் சென்று வருகிறார்கள்.

    மேலும் இயக்கப்படும் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடைபெறுகின்றன. எனவே பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் திகிலுடன் பயணம் மேற் கொள்கின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத் தில் உள்ள 6 பணிமனைகளில் திருவள்ளூரில் 33, ஊத்துக்கோட்டையில் 19, திருத்தணியில் 38, பொதட்டூர் பேட்டையில் 7, பொன்னேரியில் 12 பஸ்கள் தற்காலிக டிரைவர்கள் மூலம் இயக்கப்பட்டன.

    Next Story
    ×