என் மலர்
செய்திகள்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனாதையாக தவிக்கும் குழந்தை
உறவினரை அழைத்து விசாரணை நடத்தியும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனாதையாக தவிக்கும் குழந்தையால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 3 நாட்களுக்கு முன், 6 மாத ஆண் குழந்தையுடன் வந்த பெண் அங்கு இருந்து அவல்பூந்துறை சேர்ந்த மூதாட்டியிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்.
நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி குழந்தையை அரசு தலைமை மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து நடந்த சம்பவத்தை கூறி சென்றார்.
குழந்தையை விட்டு சென்ற பெண்ணின் பையில் இருந்த கடிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை கிராமம், வெள்ளைசாமி மகன் முருகேசன் என்ற முகவரி இருந்தது. மேலும் கடிதத்தில் கலைச்செல்வி என்ற பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது குறித்து ஈரோடு போலீசாரின் பரிந்துரைப்படி புதுகை போலீசார் குடுமியான்மலை கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடித்தில் இருந்த முகவரியில் முருகேசன் தந்தை வெள்ளைசாமி வசித்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வெள்ளைசாமி அவரது மனைவி செல்லமாள், மற்றும் முருகேசனின் மனைவி கண்ணம்மா ஆகியோர் நேற்று மாலை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு விசாரணைக்காக வந்தனர்.
அப்போது முருகேசனுக்கு கண்ணம்மா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும், முருகேசன் இரண்டு ஆண்டுகளாக தங்களுடன் தொடர்பில் இல்லை. அவர் எங்கு இருக்கிறார்? என்ற விவரம் தெரியவில்லை. கலைச்செல்வியும் யார் என்று தெரியவில்லை என்று வெள்ளைசாமி தெரிவித்தார்.
மேலும் தங்களுக்கும் 6 மாத ஆண் குழந்தைக்கும் எந்தவித தொடர்பு இல்லை என்று போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக வெள்ளைசாமி எழுதி கொடுத்து சென்று விட்டார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.
முருகேசனை கண்டு பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மையில் இந்த குழந்தை யாருடையது? என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். அதுவரை குழந்தை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை நல வார்டில் வைத்து பராமரிக்கப்படும் என்றனர்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 3 நாட்களுக்கு முன், 6 மாத ஆண் குழந்தையுடன் வந்த பெண் அங்கு இருந்து அவல்பூந்துறை சேர்ந்த மூதாட்டியிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்.
நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி குழந்தையை அரசு தலைமை மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து நடந்த சம்பவத்தை கூறி சென்றார்.
குழந்தையை விட்டு சென்ற பெண்ணின் பையில் இருந்த கடிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை கிராமம், வெள்ளைசாமி மகன் முருகேசன் என்ற முகவரி இருந்தது. மேலும் கடிதத்தில் கலைச்செல்வி என்ற பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது குறித்து ஈரோடு போலீசாரின் பரிந்துரைப்படி புதுகை போலீசார் குடுமியான்மலை கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடித்தில் இருந்த முகவரியில் முருகேசன் தந்தை வெள்ளைசாமி வசித்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வெள்ளைசாமி அவரது மனைவி செல்லமாள், மற்றும் முருகேசனின் மனைவி கண்ணம்மா ஆகியோர் நேற்று மாலை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு விசாரணைக்காக வந்தனர்.
அப்போது முருகேசனுக்கு கண்ணம்மா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும், முருகேசன் இரண்டு ஆண்டுகளாக தங்களுடன் தொடர்பில் இல்லை. அவர் எங்கு இருக்கிறார்? என்ற விவரம் தெரியவில்லை. கலைச்செல்வியும் யார் என்று தெரியவில்லை என்று வெள்ளைசாமி தெரிவித்தார்.
மேலும் தங்களுக்கும் 6 மாத ஆண் குழந்தைக்கும் எந்தவித தொடர்பு இல்லை என்று போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக வெள்ளைசாமி எழுதி கொடுத்து சென்று விட்டார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.
முருகேசனை கண்டு பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மையில் இந்த குழந்தை யாருடையது? என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். அதுவரை குழந்தை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை நல வார்டில் வைத்து பராமரிக்கப்படும் என்றனர்.
Next Story






