என் மலர்
செய்திகள்

காரைக்குடியில் எம்.ஜி.ஆர். சிலை திடீர் அகற்றம்: முழு உருவச்சிலை வைக்கப்பட்டதால் பரபரப்பு
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஐந்து விலக்கு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை இருந்தது.
இந்த சிலை சேதமடைந்து காணப்பட்டதால் அதனை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இது தொடர்பாக நகராட்சி கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க. கவுன் சிலர் ஒருவர் சிலையை சீரமைக்கப்போகிறேன் என எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் போலீசார் தலையிட்டு சிலையை மீட்டு வைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ஐந்து விலக்கு பகுதிக்கு வந்தவர்கள் அந்த இடத்தில் எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அங்கிருந்த மார்பளவு சிலையை நள்ளிரவில் யாரோ அகற்றிவிட்டு முழு உருவச்சிலையை வைத்துள்ளனர். இதற்கு எந்த வித அனுமதியும் பெறப்படவில்லை.
பழைய சிலையை அகற்றிவிட்டு புதிய எம்.ஜி. ஆர். சிலை அமைக்கப்பட்ட விவகாரம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






