என் மலர்
செய்திகள்

கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: விஜயகாந்த் பேட்டி
ஆலந்தூர்:
பள்ளிக்கரணை அருகே உள்ள நாராயணபுரம் ஏரி தொடர்மழையால் முழுவதும் நிரம்பி வழிகிறது. ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து உள்ளது.
இந்த நிலையில் நாராயணபுரம் ஏரியை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மனைவி பிரேமலதா மற்றும் கட்சி நிர்வாகிகள் வந்து இருந்தனர்.
ஏரியில் போடப்பட்ட மணல் மூட்டைகளில் விஜயகாந்த் சிறிது தூரம் நடந்து சென்று பார்வையிட்டார். அவரை கட்சி நிர்வாகிகள் கைதாங்கலாக அழைத்து சென்றனர்.
பின்னர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

கமல், புதிய கட்சி தொடங்கினால் வரவேற்பேன். அவர் கட்சி தொடங்கி கிளை கழகங்கள் ஆரம்பிக்கட்டும். அதன் பின்னர் கூட்டணி எல்லாம் பற்றி பேசிக்கொள்ளலாம். யார் கட்சி தொடங்கினாலும் வரவேற்கிறேன். திரைப்படத்துரைக்கு கமல் என்ன செய்தார் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். அரசு நிதிகள் மக்களுக்கு ஒதுக்கப்படவில்லை. அரசியல் வாதிகளுக்குதான் ஒதுக்கப்படுகிறது.
பிரேமலதா கூறும்போது, “பிரதமர் மோடி- கருணாநிதி சந்திப்பை அரசியல் ஆக்க வேண்டாம்” என்றார்.






