என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்.

    வேதாரண்யம், மணியன் தீவில் 16 கிலோ கஞ்சா பறிமுதல் - கடத்தல் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

    வேதாரண்யத்தை அடுத்த மணியன் தீவு கடற்கரையில் கஞ்சா மூட்டைகள் பற்றிய தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்திலிருந்து மர்ம கும்பல் இலங்கைக்கு கஞ்சாவை கடத்தி வருகிறது. இந்த கும்பல் கடல் வழியாக கஞ்சாவை கடத்தி செல்வதாக கூறப்படுகிறது.

    கடந்த 2015-ம் ஆண்டு வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகையிலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடியக்கரையிலும் இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுதொடர்பாக கடலோர காவல்படை விசாரணை மேற்கொண்டது. இதில் யாரும் சிக்கவில்லை.

    இந்த நிலையில் வேதாரண்யத்தை அடுத்த மணியன் தீவு கடற்கரையில் கஞ்சா மூட்டைகள் கிடப்பது இன்று தெரியவந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    மொத்தம் 8 மூட்டைகளில் தலா 2 கிலோ வீதம் 16 கிலோ கஞ்சா இருந்தது. இதன்மதிப்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். இந்த கடத்தலில் ஈடுபட்ட கும்பல் எது என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக கடலோ காவல்படையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வரும் கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வேதாரண்யத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    Next Story
    ×