என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொறையாறு அருகே மர்ம காய்ச்சலுக்கு கிராம உதவியாளர் பலி
    X

    பொறையாறு அருகே மர்ம காய்ச்சலுக்கு கிராம உதவியாளர் பலி

    பொறையாறு அருகே மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த கிராம உதவியாளர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம், பொறையாறு அருகே ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் கீழவீதியை சேர்ந்தவர் சீமான் (வயது 50). இவர் தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரியில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் சீமானுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக பொறையாறில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும், அதனை தொடர்ந்து திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.

    சீமானின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து குடும்பத்தினர் அவரை தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சீமானுக்கு மர்ம காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த சீமான், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவருக்கு லலிதா என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
    Next Story
    ×