என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொண்டை மண்டல ஆதீன மடத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்
    X

    தொண்டை மண்டல ஆதீன மடத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்

    காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகில் தொண்டை மண்டல ஆதீனம் ஞானபிரகாச மடத்தை நித்யானந்தா சாமிகளின் சீடர்களிடமிருந்து மீட்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகில் தொண்டை மண்டல ஆதீனம் ஞானபிரகாச மடத்தை நித்யானந்தா சாமிகளின் சீடர்களிடமிருந்து மீட்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார், மாநில செயலாளர் செந்தில்குமார், சேக்கிழார் கல்வி பண்பாட்டு கழக மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தொண்டை மண்டல முதலியார்கள் அமைப்பினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டை மண்டல ஆதீனத்தில் தங்கியிருக்கும் நித்யானந்தா சீடர்களை வெளியேற்ற வேண்டும். மடத்தில் பூஜைகள் வழக்கம் போல தொடர்ந்து நடக்க வேண்டும்.

    தொண்டை மண்டல ஆதீனத்தின் சொத்துக்களை அபகரிக்க முயலும் நித்யானந்தாவின் செயலை கண்டித்தும், சிவபூஜை நடக்கும் இடத்தில் நித்யானந்தாவின் உருவ பொம்மைக்கு வழிபாடு நடத்துவதை கண்டித்தும். இந்த மடத்தின் ஆயிரம் கோடி சொத்துக்களை காப்பாற்றவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.

    Next Story
    ×