என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரி எதிரொலி: ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது
    X

    ஜி.எஸ்.டி. வரி எதிரொலி: ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு எதிரொலியாக ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்து விட்டது. இதனால் ஜவுளி வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறினர்.
    ஈரோடு:

    மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஜவுளி மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே ஜவுளி தொழிலுக்கு விதித்த ஜி.எஸ்.டி. வரியை விலக்கி கொள்ள வேண்டும் என ஜவுளி மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் 3 நாட்கள் அடைக்கப்பட்டன.

    மேலும் ஜவுளி நிறுவனங்களை சேர்ந்த சங்க பிரதிநிதிகள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து தங்கள் கோரிக்கையை முறையிடப் போவதாகவும், நல்ல தீர்வு கிடைக்கும் என கூறினர்.

    மேலும் அப்படி நல்ல தீர்வு கிடைக்காவிலட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஈரோட்டில் ஜவுளி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் மிகவும் வருத்தத்துடன் உள்ளனர்.

    ஜவுளி விற்பனைக்கு பெயர் போன ஈரோட்டில் பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி சந்தை உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளன.

    உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகளும் இங்கு ரெடிமேடு ஜவுளி கடைகளை வைத்துள்ளனர். இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் தேவையான ரெடிமேடு ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த கனி மார்க்கெட் ஜவுளி சந்தைக்கு வெளி மாவட்ட மற்றும் ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, கர் நாடகா போன்ற வெளி மாநில வியாபாரிகளும் வந்து சில்லரைக்கும், மொத்தமாகவும் ஜவுளிகளை வாங்கி கொண்டு சென்று தங்கள் ஊர்களில் விற்பனை செய்வார்கள்.

    ஆனால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு எதிரொலியாக கடந்த 2 நாட்களாக ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தைக்கு வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்து விட்டது. இதனால் ஜவுளி வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் மிகவும் கவலையுடன் கூறினர்.
    Next Story
    ×