search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முல்லைபெரியாறு அணையில் தமிழகத்திற்கான உரிமை ஒப்பந்தம் கையெழுத்தான 136-வது வருடம்
    X

    முல்லைப்பெரியாறு அணை

    முல்லைபெரியாறு அணையில் தமிழகத்திற்கான உரிமை ஒப்பந்தம் கையெழுத்தான 136-வது வருடம்

    • லண்டனை சேர்ந்த பொறியாளர் பென்னிகுக் தனது அயராத முயற்சியால் 9 வருடங்களாக பல்வேறு சிரமங்களை சந்தித்து இந்த கட்டுமான பணிகளை மேற்கொண்டார்.
    • கேரளாவுக்கு குத்தகை பணமாக ஏக்கருக்கு ரூ.5 வழங்க வேண்டும் என்பது உள்பட 7 நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    கூடலூர்:

    மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார முக்கியத்துவத்தில் அங்கமாக உள்ளது முல்லைபெரியாறு அணை. இந்த அணை கேரள மாநில எல்லைக்குள் இருந்தாலும் அணை முழுக்க தமிழகத்திற்கு சொந்தமானதாகும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1886-ம் ஆண்டு பெரியாறு குறுக்கே 8000 ஏக்கர் பரப்பளவில் இந்த அணை கட்டப்பட்டது.

    லண்டனை சேர்ந்த பொறியாளர் பென்னிகுக் தனது அயராத முயற்சியால் 9 வருடங்களாக பல்வேறு சிரமங்களை சந்தித்து இந்த கட்டுமான பணிகளை மேற்கொண்டார். 1895-ல் இதன் பணிகள் முடிவடைந்தது. பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதற்காக 1886-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஸ்ரீ மூலம் முன்னிலையில் திவான் ராமையங்கார், சென்னை மகாணத்தின் சார்பில் கொச்சி-திருவிதாங்கூர் பொறுப்பில் இருந்த ஜான்சைல்டு காலிங்டன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    999 வருடங்களுக்கு இந்த அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். அதுவரை இந்த அணை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். கேரளாவுக்கு குத்தகை பணமாக ஏக்கருக்கு ரூ.5 வழங்க வேண்டும் என்பது உள்பட 7 நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்தம் 1970-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அப்போது குத்தகை பணம் ஏக்கருக்கு ரூ.30 என நிர்ணயிக்கப்பட்டது. முல்லைபெரியாறு நீரை பயன்படுத்தி தமிழ்நாடு தயாரிக்கும் மின்சாரத்திற்காக ஒரு கிலோவாட்டுக்கு ரூ.12 கேரளாவுக்கு கொடுக்க வேண்டும். 30 வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.

    முல்லைபெரியாறு அணை ஒப்பந்தம் போடப்பட்டு நாளை 136 வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×