search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் 100 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்
    X

    தமிழகம் முழுவதும் 100 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்

    • முதல் நிலை காவலர்கள் முதல் ஐ.ஜி.க்கள் வரை 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக பணியாற்றுபவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது.
    • பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் போலீசாரையும், சொந்த ஊரில் தொடர்ச்சியாக பணியாற்றி வரும் போலீசாரையும், உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

    இதையடுத்து சொந்த ஊரில் 3 ஆண்டுகள் பணியாற்றி வரும் போலீசாரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக முதல் நிலை காவலர்கள் முதல் ஐ.ஜி.க்கள் வரை பணியிட மாற்றம் செய்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தெற்கு மண்டலத்துக்கும், தெற்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் வடக்கு மண்டலத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து சென்னையில் 62 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்தார். மேலும் 35 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 100 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய டி.எஸ்.பி.க்கள் மற்றும் சொந்த ஊரில் தொடர்ச்சியாக பணியாற்றிய டி.எஸ்.பி.க்கள் 100 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் முதல் நிலை காவலர்கள் முதல் ஐ.ஜி.க்கள் வரை 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக பணியாற்றுபவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.

    Next Story
    ×