என் மலர்tooltip icon

    விளையாட்டு

    எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை நடத்த இங்கிலாந்து விருப்பம்
    X

    எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை நடத்த இங்கிலாந்து விருப்பம்

    • நேற்று முன்தினம் தர்மசாலாவில் நடந்த பஞ்சாப்-டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
    • நடப்பு தொடரில் 12 லீக் ஆட்டம் மற்றும் 4 நாக்-அவுட் ஆட்டம் உள்பட 16 போட்டிகள் எஞ்சி உள்ளன.

    10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நேற்று முன்தினம் தர்மசாலாவில் நடந்த பஞ்சாப்-டெல்லி (58-வது லீக் ஆட்டம்) அணிகள் மோதிய ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

    போர் பதற்ற சூழல் காரணமாக ஐ.பி.எல் போட்டியை தொடர்ந்து நடத்தலாமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவசர ஆலோசனை நடத்தியது. இதில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நடப்பு தொடரில் 12 லீக் ஆட்டம் மற்றும் 4 நாக்-அவுட் ஆட்டம் உள்பட 16 போட்டிகள் எஞ்சி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியதாக தி கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஒரு வார நிறுத்தி வைப்புக்கு பிறகும் இந்தியாவில் ஐ.பி.எல் போட்டியை மீண்டும் தொடங்க முடியாவிட்டால், மீதமுள்ள போட்டிகளை இந்த ஆண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் நடத்தலாம் என்று அவர் பரிந்துரைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×