என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
அமெரிக்காவை வீழ்த்தி ஈரான் சாதனை படைக்குமா? இன்று நள்ளிரவு மோதல்
- ஈரான்-அமெரிக்கா இடையேயான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்.
- வேல்சை வீழ்த்தி இருந்ததால் ஈரான் நம்பிக்கையுடன் ஆடும்.
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள 4 அணிகளும் நேற்றுடன் 2 ஆட்டங்களில் மோதி விட்டன. இன்று முதல் 3-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் விளையாடுகின்றன.
ஏ பிரிவில் இன்று நடைபெறும் கடைசி ஆட்டங்களில் ஈக்வடார்-செனகல், நெதர்லாந்து- கத்தார் ( இரவு 8.30 ) அணிகள் மோதுகின்றன. இந்த பிரிவில் கத்தார் 2 தோல்வியுடன் ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.
நெதர்லாந்து, ஈக்வடார் அணிகள் 1 வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று உள்ளன. இரு அணிகளும் தங்களது ஆட்டங்களில் டிரா செய்தாலே 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். சென கலை பொறுத்தவரை வெற்றி பெற்றால் தான் வாய்ப்பை பெற இயலும். அந்த அணி 1 வெற்றி, 1 தோல்வியுடன் 3 புள்ளி பெற்றுள்ளது.
குரூப்-பி பிரிவில் இன்று நடைபெறும் போட்டிகளில் இங்கிலாந்து-வேல்ஸ், ஈரான்-அமெரிக்கா (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்து 1 வெற்றி, 1 டிராவுடன் 4 புள்ளியும், ஈரான் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 3 புள்ளியும், அமெரிக்கா 2 டிராவுடன் 2 புள்ளியும், வேல்ஸ் 1 டிரா, ஒரு தோல்வியுடன் 1 புள்ளியும் பெற்றுள்ளன.
1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து டிரா செய்தாலே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும். அதிக கோல்கள் இருப்பதால் தோற்றாலும் பாதிப்பு ஏற்படாது. அந்த அணி "ஏ" பிரிவில் முதல் இடத்தை பிடிக்க வேல்சை வீழ்த்த முயற்சிக்கும். வேல்சை பொறுத்தவரை கண்டிப்பாக வெல்ல வேண்டும். அந்த அணிக்கு வாய்ப்பு மிகவும் குறைவே.
ஈரான்-அமெரிக்கா இடையேயான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெறும். வேல்சை வீழ்த்தி இருந்ததால் ஈரான் நம்பிக்கையுடன் ஆடும். அந்த அணி முதல் முறையாக 2-வது சுற்றுக்கு தகுதி பெற்று புதிய சாதனை படைக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்