என் மலர்
டென்னிஸ்

மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: முதல் சுற்றில் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி
- மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- ஒற்றையர் பிரிவில் ஜெர்மன் வீரர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் மெட்டியோ பெரேட்டினி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-2 ஸ்வரேவும், 2வது செட்டை 6- 3 என பெரேட்டினியும் வென்றனர்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பெரேட்டினி 7-5 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
Next Story






