என் மலர்
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆண்ட்ரிவா
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- காலிறுதியில் ரஷிய வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய பென்கிக் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் ரஷிய வீராங்கனை ஆண்ட்ரிவா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் பென்கிக், ஸ்வியாடெக் உடன் மோதுகிறார்.
Next Story






