என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    மியாமி ஓபன் டென்னிஸ்: சபலென்கா, காலின்ஸ் 3-வது சுற்றுக்கு தகுதி
    X

    மியாமி ஓபன் டென்னிஸ்: சபலென்கா, காலின்ஸ் 3-வது சுற்றுக்கு தகுதி

    • 2-வது சுற்று ஆட்டத்தில் சபலென்கா(பெலாரஸ்)- விக்டோரியா டோமோவா (பல்கேரியா) மோதினர்.
    • சபலென்கா 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    புளோரிடா:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான சபலென்கா(பெலாரஸ்)- விக்டோரியா டோமோவா (பல்கேரியா) மோதினர். இதில் சபலென்கா 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் காலின்ஸ் (அமெரிக்கா), சொரானா மிஹேலா (ருமேனியா) உடன் மோதினார். இதில் காலின்ஸ் 6-4, 7-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் சக்காரி (கிரீஸ்), மசரோவா (சுவிட்சர்லாந்து), ஓன்ஸ் ஜபியர் (துனிசியா), லினெட்(போலந்து) ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

    Next Story
    ×