என் மலர்
டென்னிஸ்

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் மெத்வதேவ்
- பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், போலந்தின் கமில் மஜாக் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-7 என இழந்த மெத்வதேவ் அடுத்த இரு செட்களை அதிரடியாக ஆடி 6-3, 6-2 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் பிராண்டன் அகஷிமா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் ரபேல் கொலிக்னனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
Next Story






