என் மலர்
விளையாட்டு

3000 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையை முறியடித்தார் பாருல் சவுத்ரி
- டயமண்ட் லீக் தடகளப் போட்டி கத்தாரின் தோஹாவில் நடக்கிறது.
- பாருல் சவுத்ரி 3000 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையை முறியடித்தார்.
தோஹா:
டயமண்ட் லீக் தடகளத்தின் 16-வது சீசன் நடந்து வருகிறது. இதன் 3-வது சுற்று கத்தாரின் தோஹாவில் நடக்கிறது.
இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா (ஈட்டி எறிதல்), பாருல் சவுத்ரி (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), குல்வீர் சிங் (5000 மீ., ஓட்டம்) என 4 பேர் களமிறங்கினர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் பாருல் சவுத்ரி பெண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் 9:13:39 நிமிடத்தில் தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் பாருல் சவுத்ரி தேசிய சாதனையை முறியடித்தது மட்டுமல்லாமல், ஆறாவது இடத்தையும் பிடித்தார்.
நடப்பு ஆண்டின் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (3000 மீட்டர்) பாருல் சவுத்ரி போட்டியிடுவார்.
Next Story