என் மலர்
கால்பந்து

செல்சி கால்பந்து அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்
- செல்சி கால்பந்து கிளப்பின் தலைமை பயிற்சியாளராக என்ஜோ மரிஸ்கா (இத்தாலி) 2024-ம் ஆண்டு இணைந்தார்.
- அவரது பயிற்சியின் கீழ் செல்சி அணி கான்பரன்ஸ் லீக் மற்றும் கிளப் உலகக் கோப்பையை வென்று சாதித்தது.
மான்செஸ்டர்:
இங்கிலாந்தில் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் விளையாடும் பிரபலமான அணிகளில் ஒன்றான செல்சி கால்பந்து கிளப்பின் தலைமை பயிற்சியாளராக என்ஜோ மரிஸ்கா (இத்தாலி) 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இணைந்தார். அவரது பயிற்சியின் கீழ் செல்சி அணி கான்பரன்ஸ் லீக் மற்றும் கிளப் உலகக் கோப்பையை வென்று சாதித்தது.
ஆனால் தற்போது பிரிமீயர் லீக் போட்டியில் செல்சி அணியின் செயல்பாடு மெச்சும்படி இல்லை. கடைசி 7 லீக் ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இருப்பதுடன், புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் அவருக்கும், கிளப் நிர்வாகத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. கிளப்பில் தனக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று சமீபத்தில் வெளிப்படையாக கூறினார்.
இந்த நிலையில் ஒப்பந்த காலம் 2029-ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மரிஸ்கா நேற்று விலகினார்.






