என் மலர்
விளையாட்டு

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் தேவிகா சிஹாத்
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடந்தது.
- இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்தது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத், மலேசியாவின் ஜின் வெய் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தேவிகா சிஹாத் 21-8 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டில் 6-3 என முன்னிலை பெற்றிருந்தபோது மலேசியா வீராங்கனை போட்டியில் இருந்து விலகினார்.
இதனால் தேவிகா சிஹாத் முதல் முறையாக தாய்லாந்து மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோருக்கு பிறகு சாம்பியன் பட்டம் வெல்லும் 3வது இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






