என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    TNPL 2025: திருப்பூர் அணிக்கு 138 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கோவை கிங்ஸ்
    X

    TNPL 2025: திருப்பூர் அணிக்கு 138 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கோவை கிங்ஸ்

    • 20 ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது.
    • திருப்பூர் அணி தரப்பில் இசக்கிமுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    நெல்லை:

    9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

    இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய கோவை அணி திருப்பூர் அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    இதனால் 20 ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாலசுப்பிரமணியன் சச்சின் 24 ரன்கள் எடுத்தார்.

    திருப்பூர் அணி தரப்பில் இசக்கிமுத்து 3 விக்கெட்டுகளையும் நடராஜன், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    Next Story
    ×