என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    TNPL 2025: 3-வது வெற்றி ஆர்வத்தில் மதுரை பாந்தர்ஸ்- திருச்சி அணியுடன் இன்று மோதல்
    X

    TNPL 2025: 3-வது வெற்றி ஆர்வத்தில் மதுரை பாந்தர்ஸ்- திருச்சி அணியுடன் இன்று மோதல்

    • மதுரை அணி இதுவரை 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டியில் தோற்றது.
    • திருச்சி அணி இதுவரை ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 4 போட்டிகளில் தோற்றது.

    நெல்லை:

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 3-வது கட்ட ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று வருகிறது. நேற்று டன் 22 ஆட்டங்கள் முடிந்து உள்ளன.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. திருப்பூர் தமி ழன்ஸ் 8 புள்ளிகளுடனும், திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் தலா 6 புள்ளிகளுடனும், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் தலா 4 புள்ளி களுடனும், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ் ஆகியவை தலா 2 புள்ளி களுடனும் உள்ளன.

    முன்னாள் சாம்பியன் கோவை அணி 5 போட்டிகளில் தோற்றதால் வாய்ப்பை இழந்து வெளியேறியது. பிளே ஆப் சுற்றின் 3-வது இடத்துக்கு 6 அணிகள் போட்டியில் உள்ளது. இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 23- வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

    சதுர்வேத் தலைமையிலான மதுரை அணி 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டியில் தோற்றது. திருச்சியை வீழ்த்தி 3-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்றில் நீடிக்கும் ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.

    சுரேஷ்குமார் தலைமையிலான திருச்சி அணி ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 4 போட்டிகளில் தோற்றது. 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அந்த அணி வெளியேற்றப்படும்.

    Next Story
    ×