என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி டிராபி: ஆந்திராவுக்கு எதிராக 185 ரன்னில் சுருண்டது தமிழ்நாடு
- கடைசி விக்கெட்டுக்கான வித்யூத்- சந்தீப் வாரியர் ஜோடி 79 ரன்கள் சேர்த்தது.
- வித்யூத் 40 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
ரஞ்சி டிராபி 2025-26 சீசன் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அணி எலைட் குரூப் 'ஏ'-வில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் 8 அணிகள் இடம் பிடித்துள்ளன. முதல் மூன்று போட்டிகளில் தமிழ்நாடு அணி ஒரு தோல்வி, இரண்டு டிரா மூலம் 4 புள்ளிகள் பெற்று 6ஆவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் 4ஆவது போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இதில் ஆந்திராவை எதிர்த்து விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களான விமல் குமார் (10), என். ஜெகதீசன் (19) விரைவாக ஆட்டமிழந்தனர்.
அதன்பின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிய ஆரம்பித்தன. பி.சச்சின் 4 ரன்களிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 8 ரன்னிலும், பாபா இந்திரஜித் 19 ரன்னிலும், அந்த்ரே சித்தார்த் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 103 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
கடைசி விக்கெட்டுக்கு பி.வித்யூத் உடன் சந்தீப் வாரியர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. இதனால் தமிழக அணியின் ஸ்கோர் 150 ரன்னைக் கடந்தது. இறுதியாக 182 ரன்னில் தமிழ்நாடு அணி ஆல்அவுட் ஆனது. கடைசி விக்கெட்டுக்கு வித்யூத்- சந்தீப் வாரியர் ஜோடி 79 ரன்கள் சேர்த்தது. வித்யூத் 40 ரன்களில் ஆட்டமிழக்க, சந்தீப் வாரியர் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆந்திரா அணி சார்பில் பிரித்வி ராஜ் 4 விக்கெட் வீழ்த்தினார்.






