என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி கோப்பை காலிறுதி: 120 ரன்னில் சுருண்ட மும்பை அணி
- ஹெர்வாத்கர் 60 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
- ஜெய்ஸ்வால் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
ரஞ்சி டிராபியின் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. 4-வது காலிறுதியில் மும்பை- கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் கர்நாடகாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 120 ரன்னில் சுருண்டது.
தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஹெர்வாத்கர் கடைசி வரை போராடி 60 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். சித்தேஷ் லாட் 12 ரன்களும், கேப்டன் ஷர்துல் தாகூர் 16 ரன்களும் அடித்தனர்.
கர்நாடக அணி சார்பில் வித்வாத் கவேரப்பா, பிரசித் கிருஷ்ணா, ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் கர்நாடகா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
Next Story






