என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இலங்கை, பாகிஸ்தான் இடையிலான 2வது டி20 போட்டி மழையால் ரத்து
    X

    இலங்கை, பாகிஸ்தான் இடையிலான 2வது டி20 போட்டி மழையால் ரத்து

    • முதல் போட்டியில் வென்ற பாகிஸ்தான் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    • 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

    தம்புல்லா:

    பாகிஸ்தான் அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தம்புல்லாவில் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தம்புல்லாவில் நடைபெற இருந்தது. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் 2வது டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

    Next Story
    ×