என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் மெகா ஏலத்தில் UNSOLD ஆன தேவ்தத் படிக்கல், டேவிட் வார்னர்
- ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
- ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவர் என எதிர்பார்ப்பு.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கே.எல். ராகுல் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். இந்த நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி வீரர் தேவ்தத் படிக்கல் இன்றைய முதல் நாள் ஏலத்தில் unsold ஆகி இருக்கிறார். இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இதே போன்று ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னரையும் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. முதல் நாள் ஏலத்தில் இந்திய வீரர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகைக்கு ஏலம் போயினர். இதற்கு மாறாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் ஏலம் போகாததும் அரங்கேறியிருக்கிறது.






