என் மலர்
கிரிக்கெட் (Cricket)

TNPL 2025: கோவை அணிக்கு எதிராக திருப்பூர் பந்து வீச்சு தேர்வு
- திருப்பூர் அணி 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வி அடைந்துள்ளது.
- கோவை அணி 5 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 4 தோல்வி அடைந்துள்ளது.
நெல்லை:
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் திருப்பூர் அணி 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வி கண்டு 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் கோவை அணி 5 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 4 தோல்வி கண்டு 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
Next Story






