என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதியில் இந்தியாவுடன் மோதப் போவது யார்?
    X

    சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதியில் இந்தியாவுடன் மோதப் போவது யார்?

    • இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
    • ஆப்கானிஸ்தான் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் பல்வேறு சுவாரஸ்யங்களை வழங்கி வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் தொடர் தோல்விகளால் வெளியேறுவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

    எனினும், பி பிரிவில் எந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பதில் தொடர்ந்து குழப்பமான சூழல் தான் நிலவுகிறது. தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பி பிரிவின் முதல் இரு இடங்களில் உள்ளன. நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது.

    பி பிரிவில் இன்னும் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், மூன்று அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற போட்டியிடுகின்றன. இந்த பிரிவில், அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. பி பிரிவில் கடைசி இரு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஒரு போட்டியிலும் மற்றொரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோத உள்ளன.

    இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களது போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் அவை அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். மறுப்பக்கம் ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் பட்சத்தில் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறி விடும்.

    இப்படி சூழல் ஏற்படும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இங்கிலாந்து அணியின் வெற்றி மற்றும் நெட் ரன் ரேட் ஆகியவை அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

    அரையிறுதியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

    இந்திய அணி ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டன. இந்த பிரிவில் மீதமுள்ள இரு போட்டிகள் முடிவில் எந்த அணி முதலிடத்தில் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஏ பிரிவில் முதலிடத்தில் இருக்கும் அணி பி பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணையுடன் அரையிறுதியில் மோதும்.

    ஒரு பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தங்களது போட்டிகளில் வெற்றி பெற்று, இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்து் பட்சத்தில் அரையிறுதி சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாலிவை எதிர்கொள்ளும். ஒருவேளை இந்திய அணி ஏ பிரிவில் 2-ம் இடம் பிடிக்கும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதும்.

    இதுதவிர்த்து ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தை வீழ்த்தினால், அரையிறுதி சுற்றில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டு விளையாடும். தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களது போட்டிகளில் தோல்வியடையும் பட்சத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டு விளையாட வேண்டியிருக்கும்.

    Next Story
    ×