என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    17 ஆண்டுகளுக்கு பிறகு அடிலெய்டில் இந்தியா தோல்வி- தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா
    X

    17 ஆண்டுகளுக்கு பிறகு அடிலெய்டில் இந்தியா தோல்வி- தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

    • ஆஸ்திரேலியா தரப்பில் மேத்யூ ஷார்ட் 74 ரன்கள் குவித்தார்.
    • இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்று வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 73 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ்- டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். மார்ஷ் 11 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த மேத்யூ ஷார்ட் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    40 சந்தித்த நிலையில் ஹெட் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ஷார்ட்- ரென்ஷா ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு ஆடினார். ஷார்ட்சுக்கு 2 கேட்சுகளை இந்திய அணியினர் மிஸ் செய்தனர். இதனால் அவர் அரை சதம் கடந்ததுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த அலெக்ஸ் ஹேரி 9 ரன்னில் வெளியேறினார். சிறிது நேரத்தில் ரென்ஷா 30 ரன்னில் அவுட் ஆனார்.

    அதனை தொடர்ந்து கானலி- மிட்செல் ஓவன் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் பந்து வீச்சை பறக்க விட்டனர். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய கானலி அரை சதம் அடித்து அசத்தினார். ஓவன் 23 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சேவியர் பார்ட்லெட் 3, ஸ்டார்க் 4 ரன்னில் வெளியேறினர்.

    இறுதியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்த வெற்றி மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி அடிலெய்டு மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×