என் மலர்
விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் இந்தியா தோல்வி
- ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பெண்கள், ஆண்கள் பிரிவினர் காலிறுதியில் தோல்வி அடைந்தனர்.
கிங்டாவோ:
6-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 ஆண்கள் அணிகளும், 11 பெண்கள் அணிகளும் தலா 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், பெண்கள் பிரிவு காலிறுதியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் சீனாவிடம் தோல்வி அடைந்தது.
இதேபோல், ஆண்கள் பிரிவு காலிறுதி போட்டியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வி அடைந்தது.
இதன்மூலம்இந்திய அணி காலிறுதி சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது.
Next Story






