என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது பெருமை அளிக்கிறது- குஜராத் கேப்டன் ஹர்திக் மகிழ்ச்சி
Byமாலை மலர்11 May 2022 5:58 AM GMT (Updated: 11 May 2022 5:58 AM GMT)
14-வது ஆட்டத்துக்கு முன்பாகவே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது பெருமை அளிக்கிறது என குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த 57-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்தது. சுப்மன்கில் 49 பந்தில் 63 ரன் எடுத்தார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணியின் விக்கெட்டுகள் சரிந்தது. குஜராத்தின் அபார பந்துவீச்சால் லக்னோ 13.5 ஓவரில் 83 ரன்னுக்குள் சுருண்டது. குஜராத் தரப்பில் ரஷித்கான் 4 விக்கெட்டும், யஷ் தயாள், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
குஜராத் 9-வது வெற்றியை (12 ஆட்டம்) பெற்றது. இதன் மூலம் முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. புதுமுக அணியான குஜராத், தனது முதல் போட்டி தொடரிலேயே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.
வெற்றி குறித்து குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
உண்மையிலேயே எங்கள் அணி வீரர்களை நினைத்து பெருமை அடைகிறேன். இந்த பயணத்தை நாங்கள் ஒன்றாக தொடங்கியபோது எங்கள் மீது நம்பிக்கை வைத்தோம்.
ஆனால் 14-வது ஆட்டத்துக்கு முன்பாகவே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது பெருமை அளிக்கிறது. நாங்கள் வெற்றி பெற்ற அனைத்து போட்டிகளிலும் அழுத்தத்தில் இருந்தோம் என்று நினைக்கிறேன்.
இந்த ஆட்டத்தில் எதிரணி 8 விக்கெட் இழந்து இருந்தபோது நாம் இரக்கமில்லாமல் இருப்போம் என்று வீரர்களிடம் சொன்னேன். அவர்கள் கீழே சரிந்ததால் இன்னும் தாழ்த்துவோம். அதை செய்து விட்டு போட்டிக்கு பின் ஓய்வெடுப்போம் என்று கூறினேன்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் ஒரு தொழில்நுட்ப பந்து வீச்சாளர். அவரது உயரம், வேகம் காரணமாக விக்கெட் எடுப்பதில் கூடுதல் வாய்ப்பில் உள்ளார். வேகப்பந்து வீச்சு இருந்ததால் அவரை விளையாட வைக்க முடியவில்லை.
ஆனால் இந்த ஆடுகளத்தை பார்க்கும்போது வலது கை பேட்ஸ்மேன்களுக்காக ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தால் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நினைத்தோம். அதன்படி சாய்கிஷோரும் சிறப்பாக செயல்பட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல் கூறும்போது, இந்த ஆடுகளம் தந்திரமானது மற்றும் சவாலானது என்பதை அறிவோம்.
நாங்கள் நன்றாக பந்து வீசினோம். பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.
சில மோசமான ஷாட் தேர்வுகள் மற்றும் ரன் அவுட் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதில் இருந்து சில நல்ல பாடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்தது. சுப்மன்கில் 49 பந்தில் 63 ரன் எடுத்தார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணியின் விக்கெட்டுகள் சரிந்தது. குஜராத்தின் அபார பந்துவீச்சால் லக்னோ 13.5 ஓவரில் 83 ரன்னுக்குள் சுருண்டது. குஜராத் தரப்பில் ரஷித்கான் 4 விக்கெட்டும், யஷ் தயாள், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
குஜராத் 9-வது வெற்றியை (12 ஆட்டம்) பெற்றது. இதன் மூலம் முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. புதுமுக அணியான குஜராத், தனது முதல் போட்டி தொடரிலேயே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.
வெற்றி குறித்து குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
உண்மையிலேயே எங்கள் அணி வீரர்களை நினைத்து பெருமை அடைகிறேன். இந்த பயணத்தை நாங்கள் ஒன்றாக தொடங்கியபோது எங்கள் மீது நம்பிக்கை வைத்தோம்.
ஆனால் 14-வது ஆட்டத்துக்கு முன்பாகவே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது பெருமை அளிக்கிறது. நாங்கள் வெற்றி பெற்ற அனைத்து போட்டிகளிலும் அழுத்தத்தில் இருந்தோம் என்று நினைக்கிறேன்.
இந்த ஆட்டத்தில் எதிரணி 8 விக்கெட் இழந்து இருந்தபோது நாம் இரக்கமில்லாமல் இருப்போம் என்று வீரர்களிடம் சொன்னேன். அவர்கள் கீழே சரிந்ததால் இன்னும் தாழ்த்துவோம். அதை செய்து விட்டு போட்டிக்கு பின் ஓய்வெடுப்போம் என்று கூறினேன்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் ஒரு தொழில்நுட்ப பந்து வீச்சாளர். அவரது உயரம், வேகம் காரணமாக விக்கெட் எடுப்பதில் கூடுதல் வாய்ப்பில் உள்ளார். வேகப்பந்து வீச்சு இருந்ததால் அவரை விளையாட வைக்க முடியவில்லை.
ஆனால் இந்த ஆடுகளத்தை பார்க்கும்போது வலது கை பேட்ஸ்மேன்களுக்காக ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தால் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நினைத்தோம். அதன்படி சாய்கிஷோரும் சிறப்பாக செயல்பட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல் கூறும்போது, இந்த ஆடுகளம் தந்திரமானது மற்றும் சவாலானது என்பதை அறிவோம்.
நாங்கள் நன்றாக பந்து வீசினோம். பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.
சில மோசமான ஷாட் தேர்வுகள் மற்றும் ரன் அவுட் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதில் இருந்து சில நல்ல பாடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X