search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஜடேஜா
    X
    ஜடேஜா

    சென்னை அணிக்கு 6-வது தோல்வி- பந்து வீச்சாளர்கள் மீது ஜடேஜா அதிருப்தி

    சி.எஸ்.கே. அணி 6-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சாளர்கள் மீது அதிருப்தி அடைந்தார்.

    மும்பை:

    ஐ.பி.எல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி மீண்டும் பஞ்சாப் கிங்சிடம் தோற்றது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் ஷிகர் தவான் 59 பந்தில் 88 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), பனுகா ராஜபக்சே 32 பந்தில் 42 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். பிராவோவுக்கு 2 விக்கெட் கிடைத்தது.

    பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் பஞ்சாப் 11 ரன்னில் வெற்றி பெற்றது.

    அம்பத்தி ராயுடு 39 பந்தில் 78 ரன்னும் (7 பவுண்டரி, 6 சிக்சர்) , ருதுராஜ் கெய்க்வாட் 27 பந்தில் 30 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். ரபடா, ரிஷி தவான் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    சி.எஸ்.கே. அணி 6-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சாளர்கள் மீது அதிருப்தி அடைந்தார். இதுதொடர் பாக அவர் கூறியதாவது:-

    எங்களது தொடக்கம் நன்றாகவே இருந்தது. புதிய பந்தில் நாங்கள் நேர்த்தியாக வீசினோம். ஆனால் கூடுதலாக 10 முதல் 15 ரன்களை விட்டு கொடுத்து விட்டோம்.

    கடைசி 2 முதல் 3 ஓவர்களில் எங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. 170 முதல் 175 ரன்னுக்குள் நாங்கள் பஞ்சாப்பை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். கடைசியில் பந்து வீச்சாளர்கள் மோசமாக செயல்பட்டனர்.

    பேட்டிங்கில் எங்களது தொடக்கம் சரியாக அமையவில்லை. முதல் 6 ஓவர்களில் ரன்கள் எடுக்கவில்லை. அம்பத்தி ராயுடுவின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது.

    எங்களது ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை. நாங்கள் வலிமையுடன் திரும்புவோம்.

    இவ்வாறு ஜடேஜா கூறி உள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்தை மீண்டும் வருகிற 1-ந் தேதி சந்திக்கிறது.

    பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றியாகும். அந்த அணி அடுத்த போட்டியில் லக்னோவை வருகிற 29-ந் தேதி எதிர்கொள்கிறது. 

    Next Story
    ×