search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கேஎல் ராகுல் - சஞ்சு சாம்சன்
    X
    கேஎல் ராகுல் - சஞ்சு சாம்சன்

    ராஜஸ்தானுடன் இன்று மோதல்: 4-வது வெற்றி ஆர்வத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் 15-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 3.30 மணிக்கு மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா அணி சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. அந்த அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் தோற்றது. டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    டெல்லி அணி தொடக்க ஆட்டத்தில் மும்பையை வென்றது. அதை தொடர்ந்து குஜராத், லக்னோவிடம் தோற்றது. ‘ஹாட்ரிக்’ தோல்வியை தவிர்த்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் டெல்லி அணி உள்ளது.

    மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ராஜஸ்தான் அணி 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. 3-வது வெற்றிக்காக அந்த அணி காத்திருக்கிறது.

    லக்னோ அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் தோற்றது. அதைத் தொடர்ந்து சென்னை, ஐதராபாத், டெல்லி ஆகிய அணிகளை வீழ்த்தியது. ராஜஸ்தானை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் லக்னோ உள்ளது. 

    Next Story
    ×