என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Byமாலை மலர்5 April 2022 9:28 PM GMT (Updated: 5 April 2022 9:28 PM GMT)
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் 66 ரன்கள் குவித்தார்.
லாகூர்:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் பங்கேற்றது.
இதில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணியும் கைப்பற்றியுள்ளன. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்த. இதனையடுத்து முதலில் களம் இறங்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் 23 ரன்கள் அடித்தார்.
கேப்டன் பாபர் ஆசம் 46 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பின்ச் 55 ரன்கள் குவித்தார். மற்றொரு துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் 26 ரன்களும், ஜோஸ் இங்க்லிஸ் 24 ரன்களும் அடித்தனர்.
அந்த அணி 19.1 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் அடித்தது. இதையடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்ரேலியா வெற்றி பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X