search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சோதனையிலும் சாதனை படைத்த சிஎஸ்கே
    X
    சோதனையிலும் சாதனை படைத்த சிஎஸ்கே

    சோதனையிலும் சாதனை படைத்த சிஎஸ்கே- நேற்றைய போட்டியில் நடந்த சம்பவங்கள் ஒரு அலசல்

    இந்த ஐபிஎல் சீசனில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர்களில் தற்போது லக்னோ அணியின் அதிரடி பேட்ஸ்மேன் லீவிஸ் இருக்கிறார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் 7-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 210 ரன்கள் குவித்தது. இதனை லக்னோ அணி 19.2 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியில் வீரர்கள் படைத்த சாதனைகள் மற்றும் சம்பவங்கள் குறித்த தகவலை காண்போம்.

    ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. சென்னை இதுவரை நடந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்ததே இல்லை. இந்த சீசனில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததையடுத்து சென்னை அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. 

    லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் எம்எஸ் டோனி புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். அவர் 15-வது ரன்னை எடுத்த போது அனைத்து வடிவிலான 20 ஓவர் போட்டிகளிலும் சேர்த்து 7 ஆயிரம் ரன்னை தொட்டார். இந்த ரன்னை எடுத்து சாதனை புரிந்த 6-வது இந்திய வீரர் டோனி ஆவார்.

    டோனி

    விராட் கோலி (10,326 ரன்), ரோகித் சர்மா (9,936 ரன்), ஷிகர் தவான் (8,818 ரன்), ரெய்னா (8,654 ரன்), உத்தப்பா (7,120 ரன்) ஆகியோருடன் டோனி இணைந்தார். டோனி 349 ஆட்டங்களில் 7,001 ரன் எடுத்துள்ளார்.

    இந்த போட்டியில் சென்னை அணி வீரர் பிராவோ மிக பெரிய மைக்கல்லை எட்டியுள்ளார். ஐபில் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த மலிங்காவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிராவோ பிடித்துள்ளார். முதல் 5 இடத்தை பிடித்த வீரர்களில் முதல் இடத்தில் பிராவோ 171 விக்கெட்டுகள் 2-வது இடத்தில் மலிங்கா 170 விக்கெட்டுகள். 3-வது இடத்தில் அமித் மிஸ்ரா 166 விக்கெட்டுகள். 4-வது இடத்தில் பியூஸ் சாவ்லா 157 விக்கெட்டுகள். ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

    பிராவோ

    லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. சென்னை அணியினர் தவறவிட்ட கேட்சுகளால் சென்னை அணி தோல்வியை தழுவியது. மேலும் 19-வது ஓவரில் சிவம் துபே 25 ரன்கள் விட்டுக்கொடுத்ததாலும் லக்னோ அணி எளிதாக வெற்றி பெற்றது. என்னதான் தோல்வி அடைந்தாலும் சென்னை அணி வீரர்கள் 2 பேர் சாதனை படைத்துள்ளது ஆறுதலாக உள்ளது.

    லக்னோ அணி வீரர் லீவிஸ் நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். அவர் 23 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த சீசனில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை லீவிஸ் பெறுகிறார்.

    லீவிஸ்

    லக்னோ அணியின் இளம் வீரரை அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் குட்டி ஏபிடி என புகழாரம் சூட்டியிருந்தார். அதற்கு ஏற்றார்போல் நேற்று பதோனியின் ஆட்டம் இருந்தது. இக்கட்டான சூழலில் குர்ணால் பாண்ட்யாவுக்கு பதிலாக களமிறங்கிய பதோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படித்தினார். அவர் லீவிஸ்- உடன் சேர்ந்து ஆட்டத்தை முடித்து அணிக்கு வெற்றி தேடி தந்தார். போட்டியின் போது பதோனி அடித்த ஒரு சிக்சர் சென்னை அணியின் ரசிகை ஒருவரின் தலையை பதம் பார்த்தது.

    ரசிகையில் தலையை பதம் பார்த்த காட்சி

    சிக்சருக்கு வந்த பந்தை அந்த ரசிகை கேட்ச் பிடிக்க முயற்சிக்கும் போது அவரது கையில் பட்டு தலையில் விழும். ஆனால் அந்த ரசிகைக்கு பெரிய அளவில் ஏதும் காயம் ஏற்படவில்லை.

    போட்டி முடிந்த பிறகு டோனி மற்றும் கம்பீர் பேசிக் கொண்டிருப்பது போல எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. அவர்களுக்கு இடையே ஒரு மோதல் இருப்பது போல அனைவராலும் பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இந்த புகைப்படம் வைரலானது. 

    டோனி - கம்பீர்

    டோனி குறித்து கம்பீர் அதிகாமவே கருத்து தெரிவித்தது அனைவருக்கும் தெரிந்ததே. 

    டோனி - கம்பீர்

    உள்ளூர் போட்டியின் போது டோனி அணி வெற்றி பெறும். அனைவரும் எதிரணிக்கு கை குலுக்குவது வழக்கம். அப்போது டோனி வரும்போது அதனை கண்டுக்காமல் கம்பீர் செல்வார். இந்த வீடியோவும் அதிகாமவே வைரலானது. 

    Next Story
    ×