search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கங்குலி
    X
    கங்குலி

    பெண்கள் ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு நடத்த திட்டம்- கங்குலி தகவல்

    பெண்கள் ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு உள்ளது.
    மும்பை:

    பெண்கள் ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு (2023) நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டு உள்ளது.

    இந்த தகவலை அதன் தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்கலி தெரிவித்து உள்ளார்.

    மகளிர் ஐ.பி.எல். காட்சி போட்டிகள் 2020-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. கடந்த ஆண்டு பெண்களுக்கு காட்சி போட்டி நடைபெறவில்லை. தற்போது இந்த ஆண்டு மீண்டும் ஐ.பி.எல். காட்சி போட்டி நடத்தப்படுகிறது.

    ஐ.பி.எல். பிளே ஆப் நடைபெறும் தினத்தில் 4 காட்சி போட்டிகள் நடக்கிறது. புனேயில் இந்த ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    அடுத்த ஆண்டு பெண்கள் ஐ.பி.எல். போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்று கங்குலி தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும் போது, அடுத்த ஆண்டு நடைபெறும் பெண்கள் ஐ.பி.எல். போட்டியில் 5 முதல் 6 அணிகள் பங்கேற்கலாம் என்றார்.

    Next Story
    ×