என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து
Byமாலை மலர்26 March 2022 5:33 AM GMT (Updated: 26 March 2022 5:33 AM GMT)
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கிறிஸ்ட்சர்ச்:
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடை பெற்று வருகிறது.
8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் வெஸ்ட் இன்டீஸ், இங்கிலாந்து, இந்தியா ஆகிய 3 அணிகள் உள்ளன.
இன்று நடந்த 26-வது ‘லீக்’ ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன் குவித்தது. தொடக்க வீராங்கனை சுசிபேட்ஸ் 126 ரன் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் நிதா தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
266 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் ஆடியது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 194 ரன்னில் 9 விக்கெட் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 71 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் ஹன்னா ரோவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படியுங்கள்...சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்- பி.வி.சிந்து, பிரனோய் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X