search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இலங்கை அணி கேப்டன் கருணாரத்ன
    X
    இலங்கை அணி கேப்டன் கருணாரத்ன

    மொகாலி டெஸ்ட்- 2ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள்

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
    மொகாலி:

    இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 2ம் நாளான இன்று, 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்த நிலையில், முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜடேஜா 175 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். 

    இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கருணாரத்ன 28 ரன்கள், லகிரு திரிமன்னே 17 ரன்கள், மேத்யூஸ் 22 ரன்கள், தனஞ்செய டி சில்வா 1 ரன் எடுத்தனர். பதும் நிசங்கா 26 ரன்களுடனும், அசலங்கா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

    இலங்கை அணி, இந்தியாவை விட 466 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 
    Next Story
    ×