search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பந்தை அடிக்க முயலும் சென்னை வீரர்
    X
    பந்தை அடிக்க முயலும் சென்னை வீரர்

    ஐ.எஸ்.எல். கால்பந்து - நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தி 5வது வெற்றி பெற்றது சென்னை அணி

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இதுவரை 5 வெற்றிகளைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
    கோவா:

    8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் நார்த்ஈஸ்ட் அணியினர் ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதி முடிவில் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியில் 52 மற்றும் 58வது நிமிடங்களில் சென்னை அணி வீரர்கள் கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், சென்னையின் எப்.சி. அணி 2-1 என்ற கணக்கில் நார்த்ஈஸ்ட் அணியை வீழ்த்தி 5-வது வெற்றி பெற்றது.

    சென்னையின் எப்.சி. அணி தான் ஆடிய 12 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வி, 3 டிரா என மொத்தம் 18 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
    Next Story
    ×