என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
Byமாலை மலர்31 Dec 2021 1:31 PM GMT (Updated: 31 Dec 2021 1:31 PM GMT)
துபாயில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மழைக்காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டன. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 38 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. சதிஷா ராஜபக்சே (14), ரவீன் டி சில்வா (15), யாசிரு ரோட்ரிகோ (19), மதீஷா பத்திரானா (14) ஆகியோர் இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் விக்கி ஆஸ்ட்வாய் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு 32 ஓவரில் 104 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 21.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவான்ஷி ஆட்டமிழக்காமல் 56 ரன்களும், ஷெய்க் ரஷீத் 31 ரன்களும் அடிக்க இந்திய வீரர்கள் கோப்பையை வென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X