என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
பாக்சிங் டே டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் 4 வீரர்கள் மாற்றம்
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இப்போட்டி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படுகிறது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி நெருக்கடியுடன் களம் இறங்குகிறது. நாளைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
ரோரி பர்ன்ஸ், ஓலிபோப், கிறிஸ்வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோருக்கு பதிலாக சாக்கிராவ்லி, பேர்ஸ்டோ, மார்க்வுட், ஜாக்லீச் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மைக்கேல் நேசருக்கு பதிலாக கேப்டன் கம்மின்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் அறிமுகமாகிறார். 2-வது டெஸ்ட்டில் விளையாடிய ஜேய்ரிச்சர்ட்சனுக்கு பதிலாக அவர் களம் இறங்குகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்