என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்- பட்டம் வென்றார் அகானே
Byமாலை மலர்19 Dec 2021 3:29 PM GMT (Updated: 19 Dec 2021 3:29 PM GMT)
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் பிரிவில் தாய்லாந்தின் டெகாபோல்-சப்சிறீ ஜோடி தங்கம் வென்றது.
மாட்ரிட்:
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடந்த மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி மற்றும் சீன தைபே வீராங்கனை தாய் ஜூ யிங் ஆகியோர் விளையாடினர்.
போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அகானே, உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான யிங்கை 39 நிமிடங்களில் வீழ்த்தினார்.
முதல் செட்டை 14-21 என்ற புள்ளி கணக்கில் எளிதில் கைப்பற்றிய அகானே, தொடர்ந்து 2வது செட்டையும் கடும் சவால் எதுவும் இல்லாமல் 11-21 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி, சாம்பியன் பட்டத்தை வென்றார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் தாய்லாந்தின் டெகாபோல்-சப்சிறீ ஜோடி தங்கம் வென்றது. இறுதிப்போட்டியில் இந்த ஜோடி, 21-13, 21-14 என்ற செட் கணக்கில் ஜப்பான் நாட்டின் யுதா வதனாபே/அரிசா ஜோடியை வீழ்த்தியது. இந்த ஆண்டில் தாய்லாந்து ஜோடி பெற்ற ஐந்தாவது தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X