search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட் மைதானம்
    X
    கிரிக்கெட் மைதானம்

    ஒமிக்ரான் கொரோனா அச்சுறுத்தல்- மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து

    ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பல்வேறு நாடுகள் விமான சேவையை துண்டித்துள்ளன.
    துபாய்:

    தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

    தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரம் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் போத்ஸ்வானா, ஆங்காங், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை துண்டித்துள்ளன. போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. 

    ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால், ஜிம்பாப்வேயில் நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அத்துடன், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் தரவரிசை அடிப்படையில் உலகக் கோப்பையில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டன.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 4ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நியூசிலாந்தில் நடைபெறுகிறது.
    Next Story
    ×