search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசன்
    X
    சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசன்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி தொடர்ந்து நீடிப்பார்- சீனிவாசன் உறுதி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு நீடித்த நிலையான செயல்பாடுதான் காரணம் என சீனிவாசன் தெரிவித்தார்.
    சென்னை:

    ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவில் அணியின் உரிமையாளர் சீனிவாசன் பேசியதாவது:-

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு நீடித்த நிலையான செயல்பாடுதான் காரணம். டோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    தற்போதுள்ள எந்த வீரரையும் இழக்க சென்னை அணி விரும்பவில்லை. சென்னை அணியில் டோனி தொடர்ந்து நீடிப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, டோனி  சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என்றும்,  இன்னும் பல போட்டிகளுக்கு அணியை வழிநடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
    Next Story
    ×