search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூர்யகுமார் யாதவ்
    X
    சூர்யகுமார் யாதவ்

    என்னால் எந்த வரிசையிலும் விளையாட முடியும் - சூர்யகுமார் யாதவ்

    நான் தொடக்கம் முதல் 7-வது வரிசை வரை விளையாடி இருக்கிறேன். இதனால் எந்த வரிசையில் விளையாடினாலும் எனக்கு மகிழ்ச்சிதான் என சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு சூர்யகுமார் யாதவ் முக்கிய பங்கு வகித்தார். 3-வது வீரராக களம் இறங்கிய அவர் 40 பந்தில் 62 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற சூர்யகுமார் யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    என்னால் எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட முடியும். அதற்கு ஏற்ற வகையில் நான் தயாராக இருக்கிறேன். நான் தொடக்கம் முதல் 7-வது வரிசை வரை விளையாடி இருக்கிறேன். இதனால் எந்த வரிசையில் விளையாடினாலும் எனக்கு மகிழ்ச்சிதான்.

    ஐ.பி.எல். போட்டியில் கடந்த 3 ஆண்டுகளாக நான் 3-வது வீரராக விளையாடி வருகிறேன். நான் ஏற்கனவே விளையாடியதைதான் செயல்படுத்தி உள்ளேன். புதிதாக ஒன்றும் செய்யவில்லை. 20 ஓவர் போட்டியில் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன்.

    பயிற்சியின்போது நான் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டேன். வெற்றிபெற்ற அணியில் நான் இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    Next Story
    ×