என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
என்னால் எந்த வரிசையிலும் விளையாட முடியும் - சூர்யகுமார் யாதவ்
ஜெய்ப்பூர்:
நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு சூர்யகுமார் யாதவ் முக்கிய பங்கு வகித்தார். 3-வது வீரராக களம் இறங்கிய அவர் 40 பந்தில் 62 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற சூர்யகுமார் யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
என்னால் எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட முடியும். அதற்கு ஏற்ற வகையில் நான் தயாராக இருக்கிறேன். நான் தொடக்கம் முதல் 7-வது வரிசை வரை விளையாடி இருக்கிறேன். இதனால் எந்த வரிசையில் விளையாடினாலும் எனக்கு மகிழ்ச்சிதான்.
ஐ.பி.எல். போட்டியில் கடந்த 3 ஆண்டுகளாக நான் 3-வது வீரராக விளையாடி வருகிறேன். நான் ஏற்கனவே விளையாடியதைதான் செயல்படுத்தி உள்ளேன். புதிதாக ஒன்றும் செய்யவில்லை. 20 ஓவர் போட்டியில் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன்.
பயிற்சியின்போது நான் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டேன். வெற்றிபெற்ற அணியில் நான் இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்