search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து அணியினர்
    X
    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து அணியினர்

    4வது வெற்றி - இலங்கையை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

    இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஜாஸ் பட்லர், மார்கன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 112 ரன்களை சேர்த்தது.
    சார்ஜா:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் மார்கன் 40 ரன்னில் அவுட்டானார்.

    இலங்கை சார்பில் ஹசரங்கா 3  விக்கெட் வீழ்த்தினார். 

    இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.

    அதிகபட்சமாக ஹசரங்கா 34 ரன்கள் எடுத்தார். ராஜபக்ச, ஷனகா ஆகியோர் தலா 26 ரன்கள் எடுத்தனர்.

    இறுதியில், இலங்கை அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 4வது வெற்றியைப் பதிவு செய்தது.

    இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி, அடில் ரஷீத், ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
    Next Story
    ×